







இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்களுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அண்ணாத்தே திரைப்படத்தின் வெற்றியை தொடந்து பல இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வத்துடன் கதை கேட்டு இளம் இயக்குனர்களுக்கு படங்களில் நடிக்க ஒப்பு கொண்டு வருகிறார். அந்த விதத்தில் சிறுத்தை சிவா தொடர்நது தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட்காக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அந்த விதத்தில் தற்போது ரசிகர்களுக்கு இப்படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. அதன் படி, ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் நிறைவு செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மேலும் சூப்பர் ரஜினி காந்த் நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது டப்பிங், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து ரசிகர்கள் அடுத்த கட்ட தகவலுக்கு எதிர்பார்த்திருக்கின்றனர்.