Take a fresh look at your lifestyle.

கவனம் ஈர்த்த ‘செவ்வாய் கிழமை’ பட கதாபாத்திரம் போஸ்டர்

74

‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் அஜய் பூபதி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘செவ்வாய் கிழமை’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மாவுடன் இணைந்து தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள அஜய் பூபதியின் இந்தபடம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பி அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கும் இந்த படத்திற்கு தாசரதி சிவேந்திரா ஒளிப்பதி செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, பாயல் ராஜ்புத் கதாபாத்திரமான ‘ஷைலஜா’ கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், கதாநாயகியின் தோரணையும் அவளது கண்களில் இருக்கும் கசப்பான உணர்ச்சியும், விரலில் இருக்கும் பட்டாம்பூச்சியும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது.மேலும், இந்த போஸ்டர் குறித்து இயக்குனர்- தயாரிப்பாளர் அஜய் பூபதி கூறிருப்பதாவது “செவ்வாய்கிழமை திரைப்படம் 90-களில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்ஷன் திரில்லர். பாரம்பரியமான நம் மண்ணின் தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும் எனவும் திரையரங்குகளில் இப்படத்தைப் பார்த்த பிறகு பாயல் ராஜ்புத்தின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும்.முக்கியமாக இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத புதிய வகை ஜானரில் இந்தப் படம் இருக்கும்.குறிப்பாக கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானது” என்றார். தயாரிப்பாளர்கள் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் ஆகியோர் கூறிருப்பதாவது, “ஆர்.எக்ஸ்.100 படத்தின் சிந்து போல, அஜய் பூபதியின் ‘செவ்வாய்கிழமை’ ஷைலஜாவும் நெடு நாட்கள் ரசிகர்கள் நினைவில் இருக்கும். மேலும், நாங்கள் 75 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம். படத்தை உயர் தொழில்நுட்ப தரத்தில் உருவாக்குகிறோம். படத்தின் கடைசி ஷெட்யூலை அடுத்த மாதம் முடிக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதை அற்புதமாக உள்ளது எனவும் இது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று கூறினார்.