Take a fresh look at your lifestyle.

தவெக தலைவர் விஜய்க்கு இந்த பொங்கல் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ;சிபிஐ சம்மன்

108

கரூர் கூட்ட நெரிசலில் சிக்குண்டு 41 பேர் இறந்தனர். அந்த மரண வழக்கில் சிபிஐ டெல்லி அலுவலகத்தில் ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பி உள்ளது.

கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜயை பார்க்க முண்டியடித்து மக்கள் முன்னேற முயன்ற போது 41 போர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தனர். இதை சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தை சிபிஐ நேரடியாக விசாரிக்கிறது இந்த விசாரணையில் ஏற்கனவே டிவி கே கட்சி சார்ந்த புஸ்சி ஆனந்த்,ஆதார் அர்ஜுனா மற்றும் சில டி வி கே  கட்சியினர், போலீசார் ,பொதுமக்கள் சிபிஐ யில் ஆஜராகி விசாரணையில் பதில் அளித்தனர். அதேபோல் இப்பொழுது ஜனவரி 12ஆம் தேதி சிபிஐ டெல்லி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று விஜைய்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. .எனவே, இந்த பொங்கல் விஜய்க்கு சிபிஐ அலுவலகத்தில் தான்….