*MAARGAN MOVIE CAST AND CREW DETAILS*
Vijay antony – dhruv korak
Ajai deeshan -tamilarivu
Mahanadhi shankar – kaali
Samuthrakani – senior adgp raja, TN Chennai
Ramachandran – முருகவேல்
Brigida- inspector Sruthi
Deepshika – Ramya
Archana – akila
கனிமொழி – வென்னிலா
Vinod sagar- asst commisoner
Nataraj – senior neurologist
Arun raghav – IT HR
Kathir – broker agent
Rajaram -photographer Lakshman karthik
Abhishek – director Rajesh
Niharika – Ramya
Director: Leo John Paul
Music: Vijay Antony
Production House: Vijay Antony Film Corporation
Producer: Fatima Vijay Antony
Executive: Producer Naveen Kumar
Cinematographer: S.Yuva
Editor: Leo John Paul
Art Director: A.Raja
Technical Head: Janarthanan
Screenplay :Vishnu, Leo john paul
Choreography : Prabhu
மார்கன் திரைப்பட விமர்சனம்.
விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் கதாநாயகனாகவும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கடுமையாக உழைக்கிறார் என்பது இந்தப் படத்தை பார்க்கும் பொழுது தெரிகிறது.
விஜய் ஆண்டனி தனக்கு எது ஒத்து வருமோ அதை தேர்ந்தெடுத்து மார்க்கம் என்று படம் பண்ணி இரப்பது அந்த காலத்து, பாக்கியராஜ் எஸ்ஏ சந்திரசேகர் போன்றோர் ஸ்டைலை கையில் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார்.
கொலையை கொடூரமானது அதிலும் வித்தியாசமாக பலர் கொல்லப்படுவது போலீஸ் தலைவலியை தருகிறது அதை கண்டுபிடிப்பதற்காக மும்பையில் இருந்து வரவழைக்கப்படுகிற அதிகாரி விஜய் ஆண்டனி. சவாலான, இந்த கேஸை கையில் எடுத்து எப்படி குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை .
இந்தத் திரைக்கதையில் தமிழ் சித்தர்கள் விஷயத்தையும் அறிவியலையும் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் டைரக்டர். இதுபோல் ஒரு ஜோதிடர் தமிழ்நாட்டிலும் இருக்கிறார் என்பது நமது ஞாபகத்திற்கு வருகிறது. இந்த சித்தர்கள் விஷயத்தை சிறப்பாக கையாண்ட டைரக்டருக்கு உடைய பாராட்டுக்கள்.
விஜய் ஆண்டனி அலட்டிக் கொள்ளாமல் அட்டகாசமாக ஒரு பக்கம் கருகிய கருப்பு தோலுடன் சிறப்பாக செய்திருக்கிறார். புத்தியை மட்டும் பயன்படுத்தவும் ஹாலிவுட் கதாநாயகர்கள் ஸ்டைலில் நடித்திருக்கிறார். ரசிக்கும்படியாக இருக்கிறது.
கதாநாயகி இல்லையே தவிர விஜய் ஆண்டனி உடன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வாவி வந்து அலட்டல் இல்லாமல் அருமையாக பாத்திரத்தை உணர்ந்து சேகரிக்கிறார்.
அஜய் தர்ஷன் என்பவர் விஜய் ஆண்டனியின் உறவினர். ஏறக்குறைய கதாநாயகன் பாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். நீச்சல் வீரராக வந்து ஒரு எக்ஸ்ட்ரா பவர் உள்ள மனிதராக கொலைகளை தியானத்தின் மூலம் கண்டுபிடிக்கும் அதிசய ஆற்றல் மிக்கவராக அசத்தி இருக்கிறார். நல்ல எதிர்காலம் இவருக்கு உண்டு.
சமுத்திரகனி கேஸ்ட் ரோலில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். மகாநதி சங்கர் போலீஸ்காரராக வந்து விஜய் ஆண்டனிக்கு தோள் கொடுத்து கலகலப்பு மூட்டுகிறார்.
முன் கள பணியாளர்களின் மனநிலையையும் வட இந்தியர்களின் செயலையும் அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர், லியோ ஜான் பால். திரைக்கதையில் ஆந்தையையும் உலவ விட்டு ஒரு திரில்லரையும் கொடுக்கிறார். ஒரு ஊசி மூலம் உடலை கருக வைத்து கொலை செய்யும் ஒரு புதிய பாணியை டைரக்டர் சொல்லி இருப்பது அவருடைய திரைக்கதைக்கு ஒரு அழுத்தம் என்று சொல்லலாம். முடிவில் வில்லன் என்று நாம் ஒருவரை யோசிக்கும்போது எதிர்பாராத திருப்பமாக வேறொருவரை காட்டி அசத்தியிருக்கிறார் இயக்குனர் .
இந்தப் படத்தின் கலர் டோனை கிரைம் படத்திற்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவில் கொண்டு வந்த dop யை பாராட்டலாம். விஜய் ஆண்டனி பின்னணியில் அசத்தியிருக்கிறார். உழைத்தால் தான் ஒரு சிறந்த படத்தை உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து இந்த படத்தில் உருவாக்கி இருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. கிரைம் ிரில்லர் படத்தை போரடிக்காமல் எதிர்பாராத முடிவை கொடுத்து படத்தை முடிப்பது என்பது சவாலான விஷயம். அந்தப் பரிட்சையில் பாஸ் செய்து இருக்கிறார் டைரக்டர்.
இந்த படத்திற்கு 4/10 மதிப்பெண்கள்.