Take a fresh look at your lifestyle.

பிரபல பிண்ணனி பாடகி எஸ் ஜானகி காலமானார்

8

பிரபல பிண்ணனி பாடகி எஸ் ஜானகி அம்மையார் இன்று 7:30 மணி அளவில் மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை எழுதி உள்ளார்.

கானக் குயிலே
காலமானாயா?

அரைநூற்றாண்டு
ஆறுதலே
அடங்கிவிட்டாயா?

‘சிங்கார வேலனே தேவா’வில்
நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய
கீதவாணியே
முடிந்துவிட்டதா உன் மூச்சு?

தாய்மையாய் தமிழாய்
காதலாய் கருணையாய்
கண்ணீராய் புன்னகையாய்
எங்கள் வாழ்வோடு கலந்த
பாட்டரசி
உனக்கும் மரணமா?

‘நாதம் என் ஜீவனே’ என்றாயே
உன் நாதம் இருக்கிறது
ஜீவன் இல்லையே

சிரித்த முகமும்
சிவப்பு நிலாப் பொட்டும்
ஆடாமல் அசையாமல்
சித்திரம் பாடுவதுபோல்
செவ்வாய் அசைக்கும் அழகும்
கண்களை விட்டுக்
காணாமல் போகுமோ!

நீ
பாடமுடியாத பாடலென்று
எதுவும் இல்லை
உன் பாடல் கேளாமல்
இரவுகள் விடிவதில்லை

கண்ணதாசன் எழுதி
நீ பாடிய பல்லவி கொண்டே
புகழ்வணக்கம் செலுத்துகிறேன்

‘தூக்கம் உன் கண்களைத்
தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில்
நிலவட்டுமே

அந்தத்
தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத்
தொடர்ந்திருப்பேன்
என்றும்
துணையிருப்பேன்’

வாழ்க நீ அம்மா!

-கவிப்பேரரசு வைரமுத்து